ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆடைக்குமேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது: தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

ஒரு பெண்ணை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது என்று மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
ஆடைக்குமேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது: தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
Updated On :18 நவம்பர் 2021, 7:51 am

DIN

ஒரு பெண்ணை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமையாகாது என்று மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் துன்புறுத்தலில், பாலியல் ரீதியாக துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம்தான் அடிப்படைக் குற்றம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.  நாக்பூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆடைக்கு மேலே ஒரு பெண்ணைத் தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நாக்பூர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 27ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்திருந்தது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபர், 2016-ம் ஆண்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாக்பூர் நீதிமன்ற நீதிபதி, ஆடைக்கு மேலே தொடுவது பாலியல் அத்துமீறல் என்ற பிரிவின் கீழ் வராது என்றும், உடலுடன் உடல் உரசுவது மட்டும் தான் பாலியல் தாக்குதல் என்ற சட்டத்தின் கீழ் வரும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், அதிர்ச்சி தரக்கூடிய தீர்ப்பை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், முறையீட்டை வழக்காக தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. 

வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், நாக்பூர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.