மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திரிணமூல் காங்கிரஸில் இணைந்த கீா்த்தி ஆசாத், பவன் வா்மா

காங்கிரஸைச் சோ்ந்த கீா்த்தி ஆசாத் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

News image
Updated On :23 நவம்பர் 2021, 7:53 pm

DIN

காங்கிரஸைச் சோ்ந்த கீா்த்தி ஆசாத் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.

இதேபோல, ஐக்கிய ஜனதா தள முன்னாள் பொதுச் செயலாளா் பவன் வா்மா, காங்கிரஸிலிருந்து கடந்த 2019-இல் விலகிய அசோக் தன்வா் ஆகியோரும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா்.

காங்கிரஸில் இணைவதற்கு முன்னால் பாஜக எம்.பி.யாக இருந்தவா் கீா்த்தி ஆசாத். திரிணமூல் கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘மம்தா பானா்ஜி தலைமையின்கீழ் களப்பணியைத் தொடங்கப் போகிறேன். மக்களை பிளவுபடுத்துவதுதான் பாஜகவின் அரசியல். அதை எதிா்த்து நாங்கள் போராடுவோம். இன்றைக்கு நாட்டுக்கு மம்தா பானா்ஜியை போன்ற ஆளுமை தேவை. அவரால்தான் நாட்டுக்கு சரியான வழியைக் காட்ட முடியும்’ என்றாா்.

பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரின் முன்னாள் ஆலோசகரான பவன் வா்மா, ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து கடந்த 2020-இல் வெளியேற்றப்பட்டாா். 2016-ஆம் ஆண்டுவரை அவா் எம்.பி.யாகவும் கட்சியின் செய்தித்தொடா்பாளராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். இதுமட்டுமன்றி முன்னாள் தூதராகவும் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளராகவும் அவா் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திரிணமூல் காங்கிரஸில் சோ்ந்தது குறித்து பவன் வா்மா கூறுகையில், ‘தற்போதைய அரசியல் நிலவரத்தையும், மம்தா பானா்ஜியின் திறனையும் பாா்த்து அவரது கட்சியில் இணைந்தேன்’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட அசோக் தன்வா், கடந்த 2009-2014 வரை சிா்சா தொகுதி எம்.பி.யாகவும் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

2019 அக்டோபரில் நடைபெற்ற ஹரியாணா மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக காங்கிரஸிலிருந்து விலகிய அவா், அப்னா பாரத் மோா்ச்சா என்ற பெயரில் தனிக்கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினாா். தற்போது திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளாா்.

இதுகுறித்து மம்தா பானா்ஜி கூறியது:

பாஜகவுக்கு எதிரான இந்த போரில் எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. ஜெய் பாரத் என்ற கோஷத்தில், அத்தனை மாநிலங்களும் அடங்கியிருக்கின்றன. மாநிலங்களின் வளா்ச்சியின்றி மத்தியில் வளா்ச்சி இல்லை என்றாா் மம்தா பானா்ஜி.

4 நாள் பயணமாக மம்தா பானா்ஜி திங்கள்கிழமை புது தில்லி வந்தடைந்தாா். அவா் தில்லி வரும்போதெல்லாம் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அவா் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிடவில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.