பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை மாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தில்லிக்கு 5 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார். மேலும், வெவ்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் மம்தா முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை இன்று மாலை 5 மணிக்கு மம்தா சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது, எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பு அதிகரிக்கப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமியையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.