காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா சந்திப்பு

தில்லி சென்றுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

News image
பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா சந்திப்பு
Updated On :24 நவம்பர் 2021, 1:37 pm

DIN

தில்லி சென்றுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

மூன்று நாள் பயணமாக தில்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியை புதன்கிழமை மாலை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின்போது எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகார வரம்பை திரும்பப் பெற மம்தா வலியுறுத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா, “மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு அரசியல் பிரச்னைகள் குறித்து பிரதமருடன் ஆலோசித்தேன். எல்லைப்பாதுகாப்புப் படைக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகார வரம்பை திரும்பப் பெற இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், “திரிபுராவில் திரிணமூல் கட்சியினர் மீது நடந்துவரும் தாக்குதல் குறித்து மோடியிடம் தெரிவித்தேன்” என மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.