/

வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்: நள்ளிரவு முதல் அமல்

ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :30 நவம்பர் 2021, 4:49 pm

DIN


ஒமைக்ரான் கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

இதன்படி:

  • வெளிநாட்டு பயணிகள் 14 நாள்கள் பயண விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். சோதனை இரு நாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • கரோனா பரிசோதனை செய்த பிறகு 'நெகடிவ்' சான்றிதழை இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
  • கரோனா அபாயம் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • பரிசோதனையில் கரோனா இல்லை என்றால் ஒருவாரம் தனிமையில் இருக்க வேண்டும். பின்னர் மறுபடியும் சோதனை செய்ய வேண்டும். அதில் கரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.