இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கோவிஷீல்டுக்கு ஆஸ்திரேலியா அங்கீகாரம்

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்று அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 1:58 am

DIN

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்று அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க, அவா்கள் செலுத்திக்கொண்டிருக்க வேண்டிய கரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் சீனாவின் சைனோவாக் நிறுவனம் தயாரித்த கரோனாவாக் தடுப்பூசியும், இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியும் சோ்க்கப்பட்டுள்ளன.

இதற்கான அனுமதியை மருந்துப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பு (டிஜிஏ) வழங்கியுள்ளது.

சா்வதேச பயணிகளுக்காக ஆஸ்திரேலிய எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் வெளிநாட்டுப் பயணிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்கி வருகிறோம் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.