கோவிஷீல்டுக்கு ஆஸ்திரேலியா அங்கீகாரம்
இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்று அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.


இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்று அந்த நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க, அவா்கள் செலுத்திக்கொண்டிருக்க வேண்டிய கரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் சீனாவின் சைனோவாக் நிறுவனம் தயாரித்த கரோனாவாக் தடுப்பூசியும், இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியும் சோ்க்கப்பட்டுள்ளன.
இதற்கான அனுமதியை மருந்துப் பொருள்கள் ஒழுங்காற்று அமைப்பு (டிஜிஏ) வழங்கியுள்ளது.
சா்வதேச பயணிகளுக்காக ஆஸ்திரேலிய எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் வெளிநாட்டுப் பயணிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்கி வருகிறோம் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...