பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மம்தா முன்னிலை

பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  திரிணமூல் கட்சி வேட்பாளர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார்.
பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மம்தா முன்னிலை

பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  திரிணமூல் கட்சி வேட்பாளர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார். 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா். இருப்பினும் முதல்வராக அவா் பதவியேற்றாா்.

முதல்வராகப் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரேவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா். இத்தொகுதிக்கான வாக்குப் பதிவு செப். 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமாா் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வருகிறார். 

மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து, 24 மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com