எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

'இதுவரை 70% முதல் தவணை, 25% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி'

நாட்டில் இதுவரை 70 சதவிகித இளைஞர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

News image
'நாட்டில் 70% பேருக்கு முதல் தவணை, 25% இரண்டு தவணை போடப்பட்டுள்ளது'
Updated On :4 அக்டோபர் 2021, 12:39 pm

DIN

நாட்டில் இதுவரை 70 சதவிகித இளைஞர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

அதேபோன்று 25 சதவிகிதம் மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கரோனாவுக்கு எதிரான போரில் புதிய இலக்கை நாடு எட்டவுள்ளது. 

மத்திய அரசு தரவுகளின்படி நாட்டில் 25 சதவிகிதம் மக்களுக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

70 சதவிகிதம் இளைஞர்களுக்கு முதல் தவணை முடிந்துள்ளது. இதுவரை 90 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.