'இதுவரை 70% முதல் தவணை, 25% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி'
நாட்டில் இதுவரை 70 சதவிகித இளைஞர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


நாட்டில் இதுவரை 70 சதவிகித இளைஞர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அதேபோன்று 25 சதவிகிதம் மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கரோனாவுக்கு எதிரான போரில் புதிய இலக்கை நாடு எட்டவுள்ளது.
மத்திய அரசு தரவுகளின்படி நாட்டில் 25 சதவிகிதம் மக்களுக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
70 சதவிகிதம் இளைஞர்களுக்கு முதல் தவணை முடிந்துள்ளது. இதுவரை 90 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...