நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

'2047-க்குள் 100 நகரங்களில் மெட்ரோ'

நாட்டில் 2047-ம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 அக்டோபர் 2021, 11:37 am

DIN

 
நாட்டில் 2047-ம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

நாட்டின் முக்கிய நகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மெட்ரோ திட்டங்களும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.

இந்நிலையில்,  2047-ம் ஆண்டுக்குள் 100 நகரங்களை இணைக்கும் வகையில், மெட்ரோ திட்டங்கள் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், தற்போது கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்தியாவில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இது 2047-ஆம் ஆண்டுக்குள் 10 மடங்கு அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.