கரோனாவால் பணியில் இருக்கும் போது பலியான 2,800 ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பணி வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்திருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை கரோனாவால் அதிகாரிகள் , கடைநிலை ஊழியர்கள் என 3,256 ரயில்வே பணியாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதையும் படிக்க | ஷாருக்கான் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்
பணியில் இருக்கும் போதே பலியானதால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்க ரயில்வே துறை முடிவு செய்திருக்கிறது.
அதன்படி முதலில் 2800 க்கும் மேற்பட்டவர்களுக்கு பணியை வழங்குவதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் குழந்தைகளாக இருப்பவர்கள் 18-வயதைக் கடந்ததும் அவர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
அடுத்த 4 மாதத்திற்குள் அனைவருக்கும் ‘டி’ பிரிவில் கடைநிலை பணி தரப்படும் என இந்திய ரயில்வே உறுதி அளித்திருக்கிறது.