எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஹரியாணாவிலும் விவசாயிகள் மீது பாஜக எம்.பி.யின் கார் மோதல்: ஒருவர் படுகாயம்

ஹரியாணாவில் வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக எம்.பி.யின் கார் மோதியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். 

News image
கோப்புப்படம்
Updated On :7 அக்டோபர் 2021, 10:33 am

DIN

ஹரியாணாவில் வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக எம்.பி.யின் கார் மோதியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார். 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று ஹரியாணா மாநிலம் நரேன்கர்க் பகுதிக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக எம்.பி. நயாப் சைனி மற்றும் எம்எல்ஏ சந்தீப் சிங் ஆகியோர் வரவிருந்தனர். இதனால் அங்கு காவல்துறையினர் அதிகமாக குவிக்கப்பட்டிருந்தனர். 

அப்போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கார் ஒன்று வேகமாக வந்து விவசாயிகளின் மீது மோதியுள்ளது. இதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வாகனத்தின் ஓட்டுநருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அவ்வாறு செய்யாவிட்டால் அக்டோபர் 10 ஆம் தேதி காவல்நிலையத்தை சுற்றி வளைப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

முன்னதாக, உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது பாஜக அமைச்சரின் மகனின் கார் மோதி விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதே போன்றதொரு சம்பவம் ஹரியாணாவிலும் நிகழ்ந்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.