அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தில்லி காற்று மாசுபாட்டைக் குறைக்க புதிய திட்டம்

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, போக்குவரத்து சந்திப்புகளில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததும், வாகனங்களை நிறுத்தும் திட்டம் மீண்டும் வருகிறது.

News image
அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)
Updated On :12 அக்டோபர் 2021, 7:24 am

DIN



புது தில்லி: தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, போக்குவரத்து சந்திப்புகளில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததும், வாகனங்களை நிறுத்தும் திட்டம் அக்டோபர் 18 முதல் மீண்டும் தொடங்கும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, சிவப்பு விளக்கு ஒளிர்ந்ததும் வாகனங்களை அணைத்துவைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இந்த திட்டம் அக்டோபர் 18 முதல் மீண்டும் தொடங்கவிருக்கிறது. சிவப்பு விளக்கு ஒளிர்ந்து வாகனங்களை நிறுத்தியதும், இஞ்சினை அணைத்துவைக்க வேண்டும். அனைவரும் இன்று முதல் கூட இதனைத் தொடக்கலாம். ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 18 முதல் தொடங்கவிருக்கிறது என்று கேஜரிவால் அறிவித்துள்ளார்.

தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் வாரத்தில் ஒரு நாளாவது தங்களது சொந்த வாகனத்தை எடுக்காமல், தில்லி மெட்ரோ, பேருந்து அல்லது இதர வாகனங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு செல்லலாம் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.