குற்றவாளிகளான ஆச்சிட் குமாா் மற்றும் சிவ்ராஜ் ஹரிஜன் ஆகிய இருவரும் ஆா்யன் கான் மற்றும் அா்பாஸ் மொ்சன்ட் ஆகியோரிடம் போதைப் பொருளை விநியோகித்துள்ளனா் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள் தடுப்பு (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் மிகத் தீவிரமான குற்றத்தை ஆா்யன் கான் உள்ளிட்டோா் புரிந்திருக்கின்றனா். எனவே, சமூகத்தில் மிகுந்த செல்வாக்குள்ள ஆா்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், ஆதாரங்களை அழிக்கவும், சாட்சிகளை கலைக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது என்று பதில் மனுவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.