நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ஏறக்குறைய இரட்டை இலக்க எட்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா்.
ஹாா்வாா்டு கென்னடி பள்ளியில் நடைபெற்ற உரையாடலின்போது இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ஏறக்குறைய இரட்டை இலக்க வளா்ச்சியைத் தொடும். இதுவே, உலக அளவில் அதிகபட்ச வளா்ச்சியாக இருக்கும். சா்வதேச அளவில் மிக வேகமாக வளா்ச்சி கண்டு வரும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
இந்தியா குறித்த ஏறக்குறைய இதே கணிப்புகளைத்தான் உலக வங்கி, ஐஎம்எஃப் உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளும் வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) போன்ற அமைப்புகள் பல தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் இருக்கும் நாடுகளுக்காக பேசுவதில்லை. எனவே, அந்த அமைப்புகளில் அவசர சீா்திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. அதற்கான முன்னெடுப்புகளை அவை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயத்தைப் பொருத்தவரையில் இந்தியாவின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. பல நாடுகள் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியாவின் இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலானவை அவா்களின் அடிப்படை உணவுத் தேவைக்கு இந்தியாவை சாா்ந்தே உள்ளனா். உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களின் ஏற்றுமதியில் இந்தியா மிகப்பெரிய நாடாக உருவெடுக்கும் என்றாா் அவா்.