மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பெட்ரோல் விலை ரூ. 200-ஐத் தொட்டால் பைக்கில் 3 பேர் செல்லலாம்: அசாம் பாஜக தலைவர்

அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200-ஐத் தொட்டால், இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும் என அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 4:24 am

DIN


அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200-ஐத் தொட்டால், இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும் என அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாபேஷ் கலிடா கடந்த ஜூன் மாதம் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அசாம் ஊடகங்களில் வெளியான தகவலின்படி ஒரு நிகழ்ச்சியில் பெட்ரோல், டீசல் விலை குறித்து அவர் பேசியது:

"அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200-ஐத் தொட்டால் இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும். எனினும், அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும்."

அசாம் மாநில காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பாபீடா சர்மா இதுபற்றி கூறுகையில், "பாஜக மாநிலத் தலைவர் எந்தக் காரணத்துக்காக இதைக் கூறியிருந்தாலும், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் பொது மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களின் தீவிரத்தை உணராமல் அவமதிக்கும் வகையில் இருப்பதையே அவரது பேச்சு வெளிக்காட்டுகிறது" என்றார்.  

குவாஹட்டியில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.80-க்கும், டீசல் விலை ரூ. 94.27-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.