ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பாஜகவுடன் அமரீந்தர் சிங் கூட்டணியா? ஹரீஷ் ராவத் அதிர்ச்சி

பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படலாம் என்ற பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலரும் கட்சியின் மாநிலப் பொறுப்பாளருமான ஹரீஷ் ராவத் புதன்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 அக்டோபர் 2021, 10:50 am

DIN


பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படலாம் என்ற பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலரும் கட்சியின் மாநிலப் பொறுப்பாளருமான ஹரீஷ் ராவத் புதன்கிழமை தெரிவித்தார்.  

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியது:

"அமரீந்தர் சிங் பாஜகவுடன் பயணிக்க விரும்பினால் பயணிக்கட்டும். மதச்சார்பின்மைக்கான அர்ப்பணிப்பைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால் அவரை யாரால் தடுக்க முடியும்? அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளிப்பதன் சின்னமாகவே அமரீந்தர் சிங் கருதப்பட்டார். நீண்ட நாள்களாக காங்கிரஸ் பாரம்பரியத்துடன் இணைப்பில் இருந்துள்ளார்.

பாஜக 10 மாதங்களாக விவசாயிகளை எல்லையில் காக்க வைத்ததை யாரால் மறக்க முடியும்? விவசாயிகள் போராட்டம் கையாளப்பட்ட விதத்தை பஞ்சாப் மன்னிக்குமா? அவரது அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. அவருள் இருந்த மதச்சார்பின்மை அமரீந்தரை அவர் கொன்றுவிட்டதுபோல இருக்கிறது.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எந்த இழப்பும் இல்லை. சொல்லப்போனால் எங்களது எதிரிகளின் வாக்குகளையே இது பிரிக்கும். காங்கிரஸ் பாதிக்கப்படாது. சன்னி அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தே காங்கிரஸ் வாக்குகள் உள்ளன. சன்னி தொடங்கியிருக்கும் விதம் பஞ்சாப் மற்றும் ஒட்டுமொத்த நாடு முழுவதிலும் நன்மதிப்பை உருவாக்கியுள்ளது.

உத்தரகண்ட் குறித்துப் பேசுவதற்காக ராகுல் காந்தியைச் சந்திக்க வந்தேன். அங்கு தேர்தல் நடைபெறும். சமீபத்திய இயற்கைப் பேரிடர் உத்தரகண்டை முடக்கியுள்ளது. அதுகுறித்து அவரிடம் விவரித்தேன். காங்கிரஸ் தலைவரையும் சந்திப்பேன்" என்றார் ஹரீஷ் ராவத்.

முன்னதாக, புதிய கட்சியைத் தொடங்கவிருப்பதாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்துக்குத் தீர்வு கண்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படலாம் எனவும் அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.