ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வேளாண் சட்டங்கள், பிஎஸ்எஃப்-க்கு கூடுதல் அதிகாரத்திற்கு எதிர்ப்பு: நவ.8-ல் கூடுகிறது பஞ்சாப் பேரவை

வேளாண் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பை விரிவாக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 8இல் கூடுகி

News image
முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி
Updated On :27 அக்டோபர் 2021, 9:12 am

DIN

வேளாண் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பை விரிவாக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 8இல் கூடுகிறது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த சட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லைகளுக்கான எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பை 15 கி.மீ.லிருந்து 50 கி.மீ. ஆக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவாக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இவ்விரண்டு பிரச்னைகள் குறித்தும் கடந்த திங்கள்கிழமை பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 8ஆம் தேதி கூட்டப்படும் என முதல்வர் சரண்ஜீத் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும், நவ.8ஆம் தேதிக்குள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிடில், பேரவையில் நாங்கள் ரத்து செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.