பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மூளை இல்லை என்று முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸில் உள்ள 78 சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதையும் கற்பனை செய்து பார்க்கவில்லை. பஞ்சாபை காக்கத் தவறிய பாஜகவின் உண்மை முகம் கொண்ட முதல்வர் அமரீந்தர் சிங் எங்கள் மீது அமலாக்கத் துறை சோதனை நடத்தலாம் என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து பேசிய அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஒன்றும் தெரியாது. அவர் அதிகம் பேசுகிறார். அவருக்கு மூளை இல்லை. நான் பாஜகவைச் சேர்ந்த அமித் ஷாவிடமும் பேசவில்லை. சிரோன்மணி அகாலிதளத்தைச் சேர்ந்த சிக்தேவ் சிங் தின்ஷாவிடமும் பேசவில்லை. ஆனால் நிச்சயம் பேசுவேன். ஆம் ஆத்மி, காங்கிரஸுக்கு எதிரான போட்டியிட நான் எனது வலிமையை கூட்டிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.