வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

25 மாணவர்களின் நீட் தேர்வு முடிவை நிறுத்தி வைக்க உ.பி. காவல்துறை அறிக்கை

25 மாணவர்களின் நீட் தேர்வு முடிவை நிறுத்திவைக்கமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரப்பிரதேச காவல்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

News image
25 மாணவர்களின் நீட் தேர்வு முடிவை நிறுத்தி வைக்க உ.பி. காவல்துறை அறிக்கை
Updated On :30 அக்டோபர் 2021, 9:51 am

DIN


வாராணசி: உத்தரப்பிரதேச மாநிலத்தில், நீட் முறைகேடு கும்பலுடன் தொடர்பிலிருந்த 25 மாணவர்களின் நீட் தேர்வு முடிவை நிறுத்திவைக்கமாறு தேசிய தேர்வு முகமைக்கு உத்தரப்பிரதேச காவல்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

அனைத்து மாணவர்களின் முழு விவரங்கள், மாணவர்களின் கைவிரல் ரேகை உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய முழு அறிக்கையை வாராணசி காவல்துறை ஆணையர் அனுப்பி வைத்துள்ளார்.

இதர மாநிலங்களுக்கும் விசாரணைக் குழுவினர் சென்று ஆலோசனை நடத்துவார்கள். நீட் தேர்வு முறைகேடு கும்பலுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், நீட் தேர்வு முறைகேட்டுக் கும்பல் ஒன்று நிலேஷ் சிங் என்கிற பிகே என்பவர் தலைமையில் நடைபெற்று வருவதையும், அவரது ஒட்டுமொத்த குடும்பமும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதையும் வாராணசி காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்த மோசடிக் கும்பல், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிலாக, அவர்களது கும்பலைச் சேர்ந்தவர்கள் தேர்வெழுதி நீட் தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளனர். இதற்காக அவர்கள் ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோரிடமிருந்தும் மிகப்பெரிய தொகையை பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.