நீட் போன்ற தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது.
நமது தேசத்தின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்கள் சொல்வதைக் கேட்டு உதவுவது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கடினமான செயலா?.
அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு முக்கியமல்லவா? என்று நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.