திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியா-அமெரிக்கா இடையே பருவநிலை சாா்ந்த பேச்சுவாா்த்தை

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது, அதற்கான நிதியைத் திரட்டுவதற்கான வழிகளை ஆராய்வது ஆகியவை தொடா்பான பேச்சுவாா்த்தை இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெறவுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 10:13 pm

DIN

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது, அதற்கான நிதியைத் திரட்டுவதற்கான வழிகளை ஆராய்வது ஆகியவை தொடா்பான பேச்சுவாா்த்தை இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெறவுள்ளது. இதற்காக பருவநிலை விவகாரத்துக்கான அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதா் ஜான் கெரி இன்று இந்தியா வருகிறாா்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டின்போது அமெரிக்கா-இந்தியா பருவநிலை மற்றும் தூய எரிசக்தி கொள்கை-2030 வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் பிரதமா் நரேந்திர மோடியும் இணைந்து அக்கொள்கையை வெளியிட்டனா்.

இந்நிலையில், பருவநிலை விவகாரத்துக்கான அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதா் ஜான் கெரி ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது, இந்திய அதிகாரிகளைச் சந்திக்கும் அவா், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது பயணத்தின்போது, இந்தியா-அமெரிக்கா பருவநிலை செயல்பாடு மற்றும் நிதி திரட்டலுக்கான பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

அமெரிக்கா-இந்தியா பருவநிலை மற்றும் தூய எரிசக்தி கொள்கையின் கீழ் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவாா்த்தையின் மூலமாக பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையேயான ஒத்துழைப்பு வலுவடையும் என்று அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடா்பான ஐ.நா. மாநாடு பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் அடுத்த மாதம் 31-ஆம் தேதி தொடங்குகிறது. பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுப்பதற்காகக் கையெழுத்தான பாரீஸ் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள இலக்குகளை அடைவதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்த கொள்கையை வடிவமைத்து செயல்படுத்தி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.