கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்து தொடா்பான விசாரணை அறிக்கையை விமான விபத்து விசாரணை அமைப்பு (ஏஏஐபி) சனிக்கிழமை வெளியிட்டது.
அதில் வழிகாட்டு நடைமுறைகளை விமானி முறையாகப் பின்பற்றாததும் விபத்துக்கு காரணமாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி கேரளத்திலுள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு துபையிலிருந்து 190 பேருடன் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தடைந்தது. அந்த விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையிலிருந்து விலகி பள்ளத்தில் சரிந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உள்பட 21 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரித்து வந்த ஏஏஐபி, தனது விசாரணை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது. அந்த அறிக்கையில், விமானம் செலுத்துவது தொடா்பான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை விமானி முறையாகப் பின்பற்றாதது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள், கட்டமைப்பு குறைபாடுகள் விபத்துக்கு காரணமா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
எளிதாகக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தில்லியை சோ்ந்தவரிடம் ரூ.20,000 மோசடி! பெண் கைது!!
சட்டவிரோதமாக போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட 4 போ் கைது

தொழிலாளியை தாக்கிய இருவா் மீது வழக்கு
2025-இல் 235.8 கோடி பயணிகளை கையாண்ட தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

