நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஒடிசாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் 12 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்தது.

News image
ஒடிசாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து
Updated On :14 செப்டம்பர் 2021, 11:23 am

DIN

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் 12 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்தது.

ஒடிசா மாநிலத்தில் கிழக்கு ரயில்வேவிற்கு சொந்தமான சரக்கு ரயில் ஒன்று கோதுமை ஏற்றிக் கொண்டு டால்ச்சர் நோக்கி சென்று கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 2.30 மணியளவில் ஆங்குல்- டால்ச்சர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயிலானது நந்திரா ஆற்றுப் பாலத்தில் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தால் கோதுமை ஏற்றி வந்த 9 ரயில்பெட்டிகள் கவிழ்ந்து ஆற்றிற்குள் விழுந்தன. எனினும் ரயில் ஓட்டுநர் மற்றும் இதர ஊழியர்கள் காயமின்றி தப்பித்தனர்.

இந்த விபத்தால் ஆங்குல்- டால்ச்சர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. விபத்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கடும் மழை காரணமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.