ஒடிசாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து
ஒடிசாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் 12 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்தது.


ஒடிசாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தால் 12 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்தது.
ஒடிசா மாநிலத்தில் கிழக்கு ரயில்வேவிற்கு சொந்தமான சரக்கு ரயில் ஒன்று கோதுமை ஏற்றிக் கொண்டு டால்ச்சர் நோக்கி சென்று கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 2.30 மணியளவில் ஆங்குல்- டால்ச்சர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயிலானது நந்திரா ஆற்றுப் பாலத்தில் விபத்தில் சிக்கியது.
இதையும் படிக்க | குஜராத்தில் மீண்டும் இரவுநேர பொதுமுடக்கம் அறிவிப்பு
இந்த விபத்தால் கோதுமை ஏற்றி வந்த 9 ரயில்பெட்டிகள் கவிழ்ந்து ஆற்றிற்குள் விழுந்தன. எனினும் ரயில் ஓட்டுநர் மற்றும் இதர ஊழியர்கள் காயமின்றி தப்பித்தனர்.
இந்த விபத்தால் ஆங்குல்- டால்ச்சர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. விபத்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க | சர்வதேச கிரிக்கெட்டில் இனி இதைப் பார்க்க முடியாது! (விடியோ)
கடும் மழை காரணமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...