எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஆறு மாதத்திற்குள் கட்டுக்குள் வரும் கரோனா: என்சிடிசி தலைவர்

கரோனா எண்டெமிக் நிலையை அடையும் என்றால், பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும் என தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :16 செப்டம்பர் 2021, 4:03 am

DIN

இந்தியாவில் கரோனா எண்டெமிக் நோயாக மாறும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், இதே கருத்தை தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உருமாற்றம் அடைந்த புதிய கரோனாவால் மட்டும் முன்றாம் அலையை உருவாக்கிட முடியாது. 

இந்த பெருந்தொற்று நம்முடைய பெரும்பாலான கணிப்புகளை பொய்யாக்கியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள், கரோனா எண்டெமிக் நிலையை அடையும். மக்கள் மத்தியில் பரவல் தொடர்ந்து இருக்க போகிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஆனால், சாதாரண காய்ச்சலை போன்று இதனை கையாண்டுவிட முடியும்.

கரோனா எண்டெமிக் நிலையை அடையும் என்றால், பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். சுகாதார கட்டமைப்புக்கு கரோனாவை கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும். கரோனாவுக்கு எதிரான மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக தடுப்பூசி திகழ்கிறது.

75 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செயல்திறன் 70 சதவீதமாக இருந்தால், இந்தியாவில் சுமார் 50 கோடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. ஒரு டோஸ் 30-31% நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஒரு டோஸ் பெற்ற 30 கோடி மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.