திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

‘மம்தா சிறிது பதற்றமாக இருக்கிறார்’: மத்திய அமைச்சர்

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி சிறிது பதற்றமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

ஹர்தீப் சிங் புரி

Updated On :23 செப்டம்பர் 2021, 12:14 pm IST

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி சிறிது பதற்றமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரேவால் போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில், நேற்றைய பிரசாரத்தின் போது மம்தா பேசுகையில், இடைத்தேர்தலில் தான் தோற்றால் வேறொருவர் முதல்வராவார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறுகையில்,

“மம்தா சிறிது பதற்றமாக இருக்கிறார். அவருக்கு எதிராக மக்களிடம் உள்ள மனக்கசப்பை அவர் அறிந்திருப்பதை நான் உணர்கிறேன். தேர்தலுக்கு பிந்தைய வன்முறை போன்றவை பவானிபூர் தேர்தலில் பிரச்னையாக இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.