மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு  மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 11:51 am

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு  மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு வகைகளில் தடுப்பூசி இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மையங்களில் நேரில் வந்து தடுப்பூசி போட்டுகொள்ள முடியாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. 

'தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசிகளைத் தொடங்குகிறோம். இதற்காக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படும்' என்று நிதி ஆயோக்கின் டாக்டர் வி.கே. பால் தெரிவித்தார். 

மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாத முதியோர், சிறப்பு தேவை வேண்டுவோருக்கு வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்த மாவட்ட அளவில் அனைவரும் ஒருங்கிணைக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.