தில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு: ரௌடி உள்பட 3 பேர் பலி

தில்லி ரோஹிணிமாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ரௌடி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 
தில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு: ரௌடி உள்பட 3 பேர் பலி

தில்லி ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ரௌடி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரௌடி ஜிதேந்தர் கோகி என்பவருடன் மேலும் இருவர் பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இருதரப்பினருக்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தலைநகர் தில்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com