அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி

ஜூலை மாதம் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றதை தொடர்ந்து, நான்காவது முறையாக அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :24 செப்டம்பர் 2021, 12:20 pm

DIN

மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி வரும் செவ்வாய்கிழமை சந்திக்கவுள்ளார். கடைசியாக, செப்டம்பர் 14ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், வரும் செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றதை தொடர்ந்து, நான்காவது முறையாக அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல், எந்த ஒரு நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் வரும் வாரங்களில் மூன்று அல்லது நான்கு முறை அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில், தங்களின் யோசனைகளையும் பிரச்னைகளையும் எந்த வித தயக்கமும் இன்றி பகிர்ந்து கொள்ள மத்திய அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில், நேர மேலாண்மை, செயல்திறன் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் விளக்கினர். 

அதேபோல், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிகரை மேற்கோள் காட்டி எளிமையின் தேவை குறித்து பிரதமர் மோடி பேசியதாக அலுவலர்கள் தெரிவித்தனர். கடந்த முறை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, அனைத்து துறை செயலாளர்களையும் மோடி சந்தித்து பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.