டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சொந்த நலன்களுக்கு ஆப்கனைப் பயன்படுத்தக் கூடாது: பிரதமர் மோடி

எந்தவொரு நாடும் தங்களது சொந்த நலன்களுக்காக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 2:43 pm

DIN


எந்தவொரு நாடும் தங்களது சொந்த நலன்களுக்காக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

"பயங்கரவாதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் பிற்போக்குத்தன சிந்தனைகளைக் கொண்ட நாடுகள், பயங்கரவாதம் அவர்களுக்குமேகூட பெரிய அச்சுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதத்தைப் பரப்பும் இடமாகவோ, பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான இடமாகவோ ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை எந்தவொரு நாடும் தங்களது சொந்த நலன்களுக்காக சாதகமாக்கிக்கொள்ளக் கூடாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு உதவிகள் தேவை. அவர்களுக்கு உதவிகளை வழங்குவது நமது கடமை" என்றார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.