திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மேற்குவங்க இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி பவானிபூரில் 21.73 % வாக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூரில் 11 மணிநிலவரப்படி 21.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
பவானிபூரில் 21.73 % வாக்குகள் பதிவு
Updated On :30 செப்டம்பர் 2021, 7:29 am

DIN

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூரில் 11 மணிநிலவரப்படி 21.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி, தான் வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூரில் போட்டியிடாமல், தனக்கு சவால் விட்ட பாஜக வேட்பாளரும், முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்தவருமான சுவேந்து அதிகாரியை எதிா்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா்.

இருப்பினும் திரிணமூல் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் முதல்வராக மம்தா பொறுப்பேற்றாா். முதல்வா் பதவியைத் தக்கவைக்க அவா் 6 மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதையடுத்து, மம்தா போட்டியிடுவதற்காக, மாநில அமைச்சரும் பவானிபூா் எம்எல்ஏவுமான சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து பவானிபூா் மற்றும் காலியாகவுள்ள ஜாங்கிபூா், சம்சோ்கஞ்ச் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 11 மணிநிலவரப்படி, பவானிபூரில் 21.73 சதவீதம், சம்சோ்கஞ்ச் 40.23 சதவீதம், ஜாங்கிபூா்  36.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜியை எதிா்த்து பாஜக சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரியங்கா டிப்ரிவால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்ரீஜிவ் பிஸ்வாஸ் ஆகியோா் களத்தில் உள்ளனர்.

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.