மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரெம்டெசிவிர் பதுக்கல்: மருத்துவர் உள்பட 6 பேர் கைது

கர்நாடகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்த மருத்துவர் உள்பட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 7:34 am

DIN


கர்நாடகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்த மருத்துவர் உள்பட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள எலஹங்கா பகுதியில் செயல்பட்டு வரும் செவிலியரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

மூன்று கட்டங்களாக கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், நான்காவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதனிடையே கரோனாவுக்காக ரெம்டெசிவிர் மருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் மருந்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்பனை செய்து வந்த 6 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதில் ஆயுர்வேத மருத்துவர், செவிலியர் போன்றோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.