ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக தில்லியிலிருந்து ஆப்கனுக்கும் ஏர் இந்தியா விமானம் இன்று செல்கிறது.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் போர் முடிவுக்கு வருவதாக தலிபான்கள் அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இரவு 8.30 மணிக்கு தில்லியிலிருந்து புறப்படுவதாக இருந்த ஏர் இந்தியா விமானம், 8 மணிநேரம் முன்னதாக பிற்பகல் 12.30 மணிக்கே புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கன் போர் முடிவுக்கு வந்தது: தலிபான்கள்
மேலும், ஆப்கானில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அவசரகால பயன்பாட்டிற்காக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கனிலிருந்து 129 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று தில்லிக்கு பத்திரமாக மீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.