/

கேரளத்தில் புதிதாக 21,116 பேருக்கு கரோனா

​கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,116 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,30,768 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் 21,116 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 16.15 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளன.

மேலும் 19,296 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 197 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 19,246 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,79,303 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.