இந்தியா
கர்நாடகத்தில் புதிதாக 1,432 பேருக்கு கரோனா தொற்று
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,432 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,432 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,538 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 27 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,34,624 ஆக உயர்ந்துள்ளது. இதில் 28,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 37,088 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,702 பேருக்கு கரோனா
இன்றைய நிலவரப்படி 21,133 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆகஸ்ட் 18-ம் தேதிக்கான நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.80 சதவிகிதம். இறப்பு விகிதம் 1.88 சதவிகிதம்.