தமிழகத்தில் புதிதாக 1,702 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் பற்றிய சுகாதாரத் துறையின் தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 1,702 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,95,935 ஆக உயர்ந்துள்ளன.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 21,116 பேருக்கு கரோனா
மேலும் 1,892 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,41,432 பேர் குணமடைந்துள்ளனர்.
29 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 34,639 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி இன்னும் 19,864 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள முதல் 5 மாவட்டங்கள்:
கோவை - 198
சென்னை - 193
ஈரோடு - 147
தஞ்சாவூர் - 112
செங்கல்பட்டு - 98