தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 27 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை (ஆக. 24) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 24,296 பேருக்கு கரோனா தொற்று
புதிதாக 1,50,911 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1,585 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,04,0749-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 27 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,761-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,50,710-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் 26ஆம் தேதி 400 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 18,603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.