நாட்டின் சொத்துகளை விற்கிறது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி விற்றுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
ராகுல் காந்தி (கோப்புப் படம்)

நாட்டின் சொத்துகளை பிரதமர் மோடி விற்றுவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, அரசின் சொத்துகளை குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுச்சொத்துகளை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துகள் அனைத்தையும் பாஜக அரசு விற்று வருகிறது என்று விமர்சித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com