ராஜஸ்தானில் விமானப் பயிற்சியின்போது மிக்-21 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் விமானப் பயிற்சி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மிக்-21 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இதனால் அப்பகுதியில் கரும்புகை கிளம்பியது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விமானத்தில் பயணத்தை ஓட்டி வந்த விமானியை உடனடியாக செயல்பட்டு மீட்டனர்.
இலேசான காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விமான விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.