ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடந்த 4 1/2 ஆண்டுகளில் 4 1/2 லட்சம் வேலைவாய்ப்புகள்: ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 டிசம்பர் 2021, 12:34 pm

DIN


உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைத்து முதல்வர் பேசியது:

"சமாஜவாதி ஆட்சியின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்தனர். கடந்த 4 1/2 ஆண்டுகளில் எங்களது அரசு 4 1/2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதை யாரும் கேள்வியெழுப்ப முடியாது.

முன்பு 12 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. நாங்கள் 33 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுகிறோம். 

எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கியபோது ஜாதி மிகவும் ஆழமாக வேரூன்றி இருந்தது. நாங்கள் சட்டம் ஒழுங்கைக் கொண்டு வந்து மாஃபியாவுக்கு முற்றுப் புள்ளி வைத்தோம்" என்றார் யோகி ஆதித்யநாத்.

இதனிடையே, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச அரசை விமர்சித்து கூறுகையில், "சமாஜவாதி தலைமையிலான முந்தைய அரசு மாணவர்களுக்கு மடிக் கணினிகளைக் கொடுத்தது. ஆனால், தற்போதைய அரசு தடியடியை நாடுகிறது" என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.