கோடா: குடும்பத் தகராறு காரணமாக, 40 வயது மதிக்கத்தக்க பெண், தனது 5 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, பெண்ணின் கணவர் சென்றிருந்த நிலையில், ஞாயிறன்று தனது 5 பெண் குழந்தைகளுடன், கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை, கிணற்றில் 6 பேரிடன் உடல்களும் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த கிராம மக்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததும், அவர்கள் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்கலாமே.. ஒமைக்ரான் குறித்து நல்ல செய்தி சொன்ன அமெரிக்க ஆலோசகர்
5 பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட பெண் ஷிவ்லால் பஞ்ஜராவின் மனைவி பதம்தேவி என்றும், அவருக்கு 7 பெண் குழந்தைகள் இருப்பதும், தெரிய வந்துள்ளது.
4 முதல் 14 வயதுடைய ஐந்து குழந்தைகளை தன்னுடன் கிணற்றுக்கு அழைத்துச் சென்ற பதம்தேவி, அவர்களை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது இரண்டு பெண் பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், அவர்கள் உயிர்தப்பியதாகக் கூறப்படுகிறது.