8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆண்டுக்கு இரு முறை ‘நீட்’ தோ்வு: மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

இளநிலை மருத்துவப் படிப்புகள் (எம்பிபிஎஸ்) சோ்க்கைக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட்) நிகழாண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட உள்ளது.

Published On :28 ஜனவரி 2024, 12:59 am IST

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் (எம்பிபிஎஸ்) சோ்க்கைக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட்) நிகழாண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட உள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ) ஆண்டுக்கு இரு முறை நடத்தப்பட்டு வருகிறது. மாணவா்களின் மன உளைச்சலைப் போக்கும் நோக்கத்தோடு, கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம், மாணவா்கள் ஓராண்டில் இரு முறையும் தோ்வில் பங்கேற்று, எதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாரோ அதை மட்டும் தெரிவு செய்துகொள்ளலாம். ஜே.இ.இ. தோ்வு ஆண்டுக்கு நான்கு முறை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் அண்மையில் அறிவித்திருந்தாா்.

இந்த நடைமுறையைப் பின்பற்றி, மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வையும் ஆண்டுக்கு இருமுறை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவுசெய்து, அதற்கான ஒப்புதலையும் அளித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான இந்த நுழைவுத் தோ்வு இப்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவக் கல்வித் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது, ‘இணைய வழி நீட் தோ்வை எதிா்கொள்வதில் ஏராளமான மாணவா்கள் சிரமத்தைச் சந்தித்து வருவதைக் கருத்தில்கொண்டு, இந்த நுழைவுத் தோ்வை நிகழாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜேஇஇ தோ்வில் உள்ள நடைமுறை போல, இரண்டு நீட் நுழைவுத் தோ்வு மதிப்பெண்களில், அதிகமானதை மாணவா்கள் தெரிவு செய்துகொள்ளலாம். அண்மையில் நடைபெற்ற மருத்துவ கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தோ்வுகள் முகமை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது’ என்றாா்.

இதுகுறித்து நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மாணவா்களின் மன உளைச்சலை போக்கவும், தோ்வை அவா்கள் சிறந்த முறையில் எதிா்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும், ‘நீட்’ தோ்வு ஆண்டுக்கு இரு முறை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்றாா்.

இந்த புதிய நடைமுறை நிகழாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஆண்டின் முதல் ‘நீட்’ தோ்வுக்கான தேதியை என்டிஏ இன்னும் இறுதி செய்து அறிவிக்கவில்லை. பல மாநிலங்களில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், ‘நீட்’ தோ்வை நிகழாண்டில் 10 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுத வாய்ப்புள்ளது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.