தடுப்பு மருந்து குறித்து சிலரால் பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது, ''கரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கு ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை மக்கள் நம்ப வேண்டாம். கரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும்போது பல்வேறு விதமான புரளிகள் பரப்பப்பட்டன. ஆனால் மக்கள் போலியோ தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டனர். அதன் பலன் தற்போது போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ளது'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







