விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆந்திரத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலி

ஆந்திரத்தில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

News image
Updated On :30 ஜூலை 2021, 1:32 pm

DIN

ஆந்திரத்தில் பணிபுரிந்த ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். வழக்கம்போல் இவர்கள் நேற்றிரவு இறால் பண்ணை உள்ள குளம் அருகே தூங்கியுள்ளனர்.

ஆனால் இன்று காலை அவர்கள் அனைவரும் எரிந்த நிலையில் இறந்துகிடந்தனர்.தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

6 பேரும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இறந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இறப்பு குறித்து தெரியவரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த 6 புலம்பெயர் தொழிலாளர்கள் ஆந்திரத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.