நாரதா லஞ்ச வழக்கில் திரிணமூல் அமைச்சர்கள் இருவரை கைது செய்ததால், ஆவேசமடைந்த தொண்டர்கள் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கொல்கத்தாவிலுள்ள சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள் அமைச்சர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
நாரதா லஞ்ச வழக்கில் விசாரணைக்காக கொல்கத்தாவிலுள்ள சிபிஐ அலுவலகத்திற்கு பிர்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி ஆகியோருடன் மம்தா பானர்ஜி வருகை புரிந்தார்.
45 நிமிட விசாரணைக்குப் பிறகு அமைச்சர்கள் இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்ட திரிணமூல் தொண்டர்கள் அமைச்சர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.