மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட 6 பேர் பலியான நிலையில் இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டுடனான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சூரசந்த்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி மற்றும் மகன் மற்றும் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தொடரும் பெயர் மாற்றும் படலம்: அசாம் தேசிய பூங்காவின் பெயர் மாற்றம்?
பயங்கவாதிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
Strongly condemn the attack on the Assam Rifles convoy in Manipur. I pay homage to those soldiers and family members who have been martyred today. Their sacrifice will never be forgotten. My thoughts are with the bereaved families in this hour of sadness.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் என்றும் மறக்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.