புது தில்லி: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவ. 29-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
17-ஆவது மக்களவையின் 7-ஆவது கூட்டத் தொடா் நவ. 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இக்கூட்டத்தொடா் டிச. 23-ஆம் தேதி நிறைவடையும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல மாநிலங்களவை கூட்டத்தொடரும் நடைபெறும் என மாநிலங்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.