திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

115 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 115 கோடியைத் தாண்டிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:00 am IST

நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 115 கோடியைத் தாண்டிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் நாளுக்குநாள் கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரித்து வருகிறோம். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை 115 கோடியைக் கடந்துவிட்டது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் தொடா்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா்கள் ஒரு செயலை நினைத்துவிட்டால் அதனை சாதிக்கும் வரை ஓயமாட்டாா்கள் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கூற்று உண்மையாகி வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

நாட்டில் கரோனா தடுப்பூசி ஒரு தவணை மட்டுமே செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கையைவிட இரு தவணையும் செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.