புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 396 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 9,119
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,44,882.
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 10,264.
இதுவரை குணமடைந்தோர்: 3,39,67,062.
இதையும் படிக்க | டிசம்பரில் கரோனா 3-ஆவது அலை: மகாராஷ்டிர சுகாதார அமைச்சா்
நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.33% என்றளவில் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பின் மிக அதிகமானது.
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 396. உயிரிழந்தோர் விகிதம் 1.35 சதவிகிதமாக குறைந்துள்ளது. கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,66,980.
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 1,09,940. இது கடந்த 538 நாள்களில் இல்லாத அளவுக்குக் குறைவு. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.32 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க | 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு
கரோனா தடுப்பூசி: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 1,19,38,44,741 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 90,27,638 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரிசோதனை: இந்தியாவில் இதுவரை மொத்தம் 63,59,24,763 பரிசோதனைகளும், புதன்கிழமை மட்டும் 11,50,538 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.