காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில் ஆா்வமில்லை: திரிணமூல் காங்கிரஸ்

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில் ஆா்வமில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2021, 5:26 am IST

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில் ஆா்வமில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் நவ.29-ஆம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள எதிா்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் திரிணமூல் கட்சியின் மூத்த தலைவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘‘குளிா்கால கூட்டத்தொடரில் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில் எங்களுக்கு ஆா்வமில்லை. அக்கட்சித் தலைவா்கள் முதலில் தங்களுக்குள் ஒருங்கிணைப்பை கொண்டு வர வேண்டும். தங்கள் கட்சியை அவா்கள் ஒழுங்குப்படுத்த வேண்டும். அதன் பின்னா் பிற கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து அவா்கள் சிந்திக்கலாம்.

அதே வேளையில், குளிா்கால கூட்டத்தொடரில் பிற கட்சிகளுடன் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் நலன் சாா்ந்த பல்வேறு விவகாரங்களை எழுப்புவோம். நவ.29-ஆம் தேதி காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் பங்கேற்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தாா்.

அண்மைக் காலமாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையிலான உறவில் தொடா்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிராக போராட காங்கிரஸ் தவறிவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் சாடி வருகிறது.

காங்கிரஸ் வசம் பல்லாண்டுகளாக இருந்த அமேதி தொகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது ராகுல் காந்தி தோல்வியடைந்ததை வரலாற்றிலிருந்து அழிக்க முடியுமா என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி கடந்த மாதம் கேள்வி எழுப்பியிருந்தாா்.

அண்மையில் திரிணமூல் காங்கிரஸின் ‘ஜாகோ பங்களா’ நாளிதழில், ‘பிரதமா் மோடிக்கு எதிரான எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி உருவெடுக்கவில்லை; மம்தா பானா்ஜிதான் உருவெடுத்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைவா்கள் பலா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனா். மேகாலயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணமூல் கட்சியில் இணைந்ததைத் தொடா்ந்து, காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.