நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றி; ஹரியாணா முதல்வரின் மகிழ்ச்சி தரும் அறிவிப்பு

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார், மத்திய இணையமைச்சர் அஸ்வினி செளபே ஆகியோருக்கிடையே சந்திப்பு நடைபெற்றதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :2 அக்டோபர் 2021, 12:05 pm

DIN

நெல் மற்றும் தினை கொள்முதல் நாளை முதல் தொடங்கும் என ஹரியாணா முதலமைச்சர் மனோகர் லால் கத்தார் சனிக்கிழமை மதியம் அறிவித்துள்ளார். நெல்லை வாங்காமல் அரசு தாமதப்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கத்தார் வீட்டின் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தினர்.

இதையடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ள கத்தார், "பருவமழை தாமதத்தால், இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் நெல் மற்றும் தினை கொள்முதல் செய்வதை மத்திய அரசு அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனவே, கொள்முதல் நாளை தொடங்கும் என தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார், மத்திய இணையமைச்சர் அஸ்வினி செளபே ஆகியோருக்கிடையே சந்திப்பு நடைபெற்றதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல் கொள்முதலை உடனடியாக தொடங்கக் கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கர்னலில் உள்ள கத்தாரின் வீட்டின் முன்பு போராட்டத்தை மேற்கொண்டனர். 

சனிக்கிழமை காலை, அங்கு குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்களை எழுப்பியும் கொடி பிடித்தும் வந்தனர். இரவு முழுவதும் கண் விழித்து இந்த போராட்டத்தை நடத்துவோம் என அவர்கள் எச்சரித்திருந்தனர். 

காவல்துறையினர் அமைத்த தடுப்புகளின் மீது ஏறி நின்றபடி விவசாயிகள் கோபமாக கோஷம் எழுப்புவது போன்ற விடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை கண்காணித்து வந்தனர். 

இதையடுத்து, பாதுகாப்பு குவிக்கப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை தண்ணீரை பீய்ச்சி அடிப்பதன் மூலம் கலைக்க முயன்றனர். அவர்களில் சிலர் தப்பிக்க தங்களின் வாகனங்களில் ஏற முயன்றனர். இதற்கு மத்தியில், கண்ணீர் புகை குண்டு ஏற்று வந்த வாகனங்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.